வணக்கம் இந்த வலைதளத்தின் நோக்கம் அனக்ராம் ஷேர் வர்த்தக அன்பர்கள் பயனடைய வேண்டும் என்பதே . உங்கள் அனைவரையும் பாசத்துடன் வரவேற்கிறோம் .
என்னால் இயன்ற அளவு செய்திகளை திரட்டிதருகிறேன் வாரம் தவறாமல் இந்த வலைதளத்தை பாருங்கள் . பொதுவாக பங்குச் சந்தை முதலீட்டுக்கு தேவையானது பொறுமையும் நீண்ட கால தொலைநோக்கும் ஆகும் . பங்குச் சந்தையில் இன்று பணம் போட்டு இன்றே பணம் பண்ணவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பணத்தை இழக்கிறார்கள் எனவே நீண்டகால முதலீட்டு எண்ணத்துடன் பங்குச் சந்தையை அணுகுங்கள்.
தற்போது நல்ல செக்டர் எது என்று யோசியுங்கள் .
கொஞ்சம் கொஞ்சமாக மாத மாதம் வாங்குங்கள் .
ஐந்து அல்லது ஆறு பங்குகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்;
௨௦% விலை உயர்ந்த உடன் இலாபத்தை கையில் எடுங்கள்
பங்குச் சந்தை முதலீட்டர்லர்களுக்கு தன் ஒழுக்கம் மிகவும் முக்கியம்
பயமும் கூடாது பேராசையும் கூடாது .
ஏற்ற இறக்கம் என்பது பங்குச் சந்தையில் மிகவும் சகசம்
சந்தையின் கெட்டநேரம் தான் முதலீடாளர்களுக்கு நல்ல நேரம்
சந்தை விற்கும் போது நீங்கள் வாங்குங்கள் அப்போதுதான் சந்தை வாங்கும் போது நீங்கள் விற்று இலாபம் ஈட்டலாம்
இனி வரும் வாரங்களில் எந்த பங்கை வாங்கலாம் என்பது பற்றிய பரிந்துரைகளை வழங்க உள்ளேன்.
பரிந்துரைகள் யாவையும் உங்கள் பொறுப்பில் (ரிஸ்கில் ) மட்டுமே நீங்கள் ஏற்கவேண்டும்.
இந்த வலைதள உரிமையாளர் உங்கள் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பல்ல
நன்றி
கலைச்செல்வி இராமநாதன்